Friday, October 1, 2010

அண்ணல் காந்தி!

சட்டை அணியா செம்மலே!
அப்படி என்ன சிறப்பு உன்னிடம்?
மக்கள் இனத்தில் நீ கருப்பு என்பதால் இழிவு படுத்தப் பட்டாயே!
ஏன் எழவில்லை சினம் உனக்கு?
மாறாக சிந்தனை தான் எழுந்தது!
உன் உரையில் நீ வார்த்தைகளை சேர்க்கவில்லை 
மாறாக மக்களை சேர்த்தாய்! மனங்களை சேர்த்தாய்!
உன் பேச்சில் சற்றும் இல்லை வன்முறையின் கொடிய தீ!
மாறாக சிந்தனை என்னும் தீபொறி தான் எழுந்தது!
மக்கள் மனதில் கோபத்தை தூண்டவில்லை! வேகத்தை தூண்டியது! 
வன்முறை எழவில்லை! அகிம்சைப் போராட்டம் தான்  எழுந்தது!
தோட்டாக்களுக்கு இரையாகின நம் மக்களின் உடல், உயிர்!
இந்திய தேசத்திற்கு வித்தாயிற்று அவர்களின் ஆன்மா!
தலை வணங்குகிறேன் உங்கள் அனைவரையும்,
போற்றுகிறேன் உம்மை!
என் தேசத்து தந்தையே!
உன் பிள்ளைகள் ஏனோ இன்னும் வறுமையின் பிடியில்...

2 comments:

  1. I am really impressed with your writing skills...

    ReplyDelete
  2. Jagu... gud blog. You are expressive in Tamil also:)

    ReplyDelete